தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பில் பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்துக்கு, அமைப்பின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலர் முனீஸ், பேட்டை நகரத் தலைவர் சுரேஷ், பாளையங்கோட்டை நகரச் செயலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில துணைத் தலைவர் எம். மாரிமுத்து ராஜா, மாநிலச் செயலர் ஜி.அருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர். பேட்டை நகரச் செயலர் சுடலைமணி நன்றி கூறினார்.