தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பாளையங்கோட்டை வட்டக் கிளைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டக் கிளைச் செயலர் கி.மீனாட்சி சுந்தரம், திருநெல்வேலி வட்டக் கிளைத் தலைவர் சங்கர சுப்ரமணியம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், திருநெல்வேலி -பாளையங்கோட்டை வட்ட கிளைகள் இணைந்த சங்க அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போன்ற குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாநிலச் செயலர் முத்துமுகமது, மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்டப் பொருளாளர் பிச்சையா, சங்கரன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.