திருநெல்வேலி

நெல்லையில் வணிகர்கள் இரங்கல் கூட்டம்

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இரங்கல் கூட்டம்  திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சந்திப்பிள்ளையார் கோயில் அருகில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு, வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கா.முருகேசன், மாநகர தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டச் செயலர் ஆ.விநாயகம், மாவட்டப் பொருளாளர் ஆர்.பி.கே. செல்வகுமார், மாநகரச் செயலர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
முன்னதாக, திருநெல்வேலி நகரத்தில் நான்கு ரதவீதிகள் வழியாக மெளன ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு போலீஸார் அனுமதியளிக்காமல் மாற்று இடத்தைப் பரிந்துரைத்தனர். அதை வணிகர்கள் ஏற்காமல் கூட்டம் மட்டும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்ட மைய நூலகம் சார்பில்...
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சிஆர்பிஎஃப் படையினருக்கு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இந்நிகழ்விற்கு அந்தோணி குரூஸ் அடிகளார் தலைமை வகித்தார். வாசகர் வட்ட துணைத் தலைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், மைய நூலகர் ரா.வயலட், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கம்பன் இலக்கிய கழகப் பொருளாளர் எம்.ஏ.நஷீர், வாசகர் வட்டப் பொறுப்பாளர் அ.பாலசுப்பிரமணியன், சு.முத்துசாமி, புலவர் எம்.கந்தகுமார்,  பாஸ்கரன், மோசஸ்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
மோட்ச தீப பிரார்த்தனை: திருநெல்வேலி நகரம் வள்ளுவர் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில்  அருள்மிகு கோதபரமேஸ்வரி சமேத சிவகாமி அம்மாள் திருக்கோயிலில் சிஆர்பிஎஃப் வீரர்களின் ஆன்ம சாந்திக்காக மோட்ச தீப பிரார்த்தனை நடைபெற்றது. இதில், துர்கா அபிராமி திருவாசக முற்றோதுதல் மற்றும் நுகர்வோர் செயலர் மு.கணேசன், அர்ச்சகர் சந்துரு பட்டர், சுந்தர்ராஜன் பட்டர், நாகராஜன், சண்முகபாபு, சரவணன், பழனி, சீனிவாசர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT