திருநெல்வேலியில் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தில் இப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சிவஞான சித்தியார் நூலுக்கு பேராசிரியர் மீ.முருகலிங்கம் விளக்கமளித்தார். மாணவிகள் சித்ராதேவி, திலகவதி ஆகியோர் மாகேஸ்வர பூஜை நடத்தினர். பயிற்சி வகுப்பில் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை அமைப்பாளர் கு.முத்துசுவாமி தலைமையில் வள்ளிநாயகம், முருகேசன், கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அடுத்த பயிற்சி வகுப்பு மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.