நெல்லையில் இன்று மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்: கமல்ஹாசன் பங்கேற்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) நடைபெறுகிறது.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.24) நடைபெறுகிறது.
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
முன்னதாக கமல்ஹாசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணிக்கு வருகிறார்.  அங்கிருந்து தூத்துக்குடி-திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்குகிறார்.  பிற்பகலில் திருநெல்வேலி புறப்பட்டு வரும் அவர், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com