சுரண்டை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் மார்கழி மாத பஜனை நிறைவு நாள் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டாள் பஜனை குழு சார்பில் தொடர்ந்து 34ஆவது ஆண்டாக நடைபெற்ற பஜனை நிறைவு விழா நிகழ்ச்சியில் சுவாமி ஊர்வலத்துடன் பஜனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மழலையர்கள் கிருஷ்ணர், ஆண்டாள், ராதை வேடமணிந்து ஆடி, பாடினர். பின்னர் கோயிலில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் பஜனையில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பேச்சிமுத்து பாண்டியன், நடராஜன், அழகுசுந்தரம், பாலமுருகன், மாரியப்பன், சிவகுருநாதன், சிவபபிஷ்ராம், கோபால், கணபதிராமன், முத்துகிருஷ்ணன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.