தெற்குகள்ளிகுளம் பள்ளியில் 350 பேருக்கு விலையில்லா சைக்கிள்

தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பள்ளித் தாளாளர் ஜே.ஜாண்சன் ராஜ் தலைமை வகித்தார்.  பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும்  350 மாணவர், மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலர் அந்தோணி அமலராஜா, தெற்குகள்ளிகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் எப்.அகஸ்டின்,  மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் அருண்புனிதன்,  உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் மரியசிலுவை வரவேற்றார்.  கணினி ஆசிரியர் கிரீபின் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com