திருநெல்வேலியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோமையாஜுலுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், திருநெல்வேலியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினருமான சோமையாஜுலுவின் 29-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பெரியவர் பக்தவத்சலம் நினைவு அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி நகரம் இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
பள்ளிக்குழுச் செயலர் செல்லப்பா, ஐஎன்டியூசி மாநிலச் செயலர் ஆவுடையப்பன், தமிழ் முழக்கப் பேரவை ராமன், கம்பன் இலக்கிய சங்கம் முருகன், பள்ளிக்குழு உறுப்பினர் சு.சண்முகவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி , ஆசிரியர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.