அரசு அருங்காட்சியகத்தில் ஜன. 24இல் எம்ப்ராய்டரி பயிற்சி

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் எம்ப்ராய்டரி பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜன. 24) நடைபெற உள்ளது.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் எம்ப்ராய்டரி பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜன. 24) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த அருங்காட்சியகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கைவினைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம் மாதம் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு தேவையான வெள்ளை துணி, ஊசி (எண்-14), ஆரி எம்ப்ராய்டரி நூல், அளவுகோல், பென்சில், கத்தரிக்கோல் ஆகியவற்றை பயிற்சியாளர்கள் கொண்டு வர வேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com