திருநெல்வேலி கம்பன் கழகத்தின் சார்பில் 474 ஆவது ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இச்சொற்பொழிவுக்கு, பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினார். இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரி பேராசிரியர் சே.போஸ் ""கோமகனும் கோசிகனும்'' என்ற தலைப்பில் கம்பனின் ஆசிரியர் மாணவர் உறவு குறித்து பேசினார். அமைப்பின் தலைவர் சிவ.சத்திய மூர்த்தி ""அயோத்தியா காண்டம்'' என்ற தலைப்பில் ராமாயணத் தொடர் சொற்பொழிவாற்றினார்.
இதில், பாண்டியன், முருகேசன், சங்கரன், சந்திரமோகன், செந்தில்குமார், கதிரேசேன், கருடப்பன், சேதுமாதவன் உள்பட பலர் பங்கேற்றனர். அமைப்பின் செயலர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.