சங்கரன்கோவில் அருகே கண்மாயில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி அருகேயுள்ள நாய்குடி கண்மாயில் ஆண் சடலம் கிடந்ததை வியாழக்கிழமை காலையில் பார்த்த அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று ல சலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் பேன்ட், சட்டை அணிந்திருந்தார். இது குறித்து புளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மகபூப்பீவி அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் ஆய்வாளர் நாகலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.