பொன்னாக்குடியில் விபத்து: காயமடைந்தவர் சாவு

பொன்னாக்குடியில் கடந்த 6 ஆம் தேதி நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்தவர் வியாழக்கிழமை(மார்ச்21) உயிரிழந்தார்.

பொன்னாக்குடியில் கடந்த 6 ஆம் தேதி நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்தவர் வியாழக்கிழமை(மார்ச்21) உயிரிழந்தார்.
திருநெல்வேலி  பொன்னாக்குடியை அடுத்த செங்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மாடசாமி(45). இவர் கடந்த 6ஆம் தேதி பொன்னாக்குடியில் உள்ள திருநெல்வேலி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது அந்தவழியாக வந்த கார் அவர் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த மாடசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com