திருநெல்வேலி

தவறான மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு

DIN


திருநெல்வேலியில் தலைவலி மாத்திரை என நினைத்து தவறான மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்த உடையார் மனைவி பேச்சியம்மாள் (45).  இவர், கடந்த 22ஆம் தேதி திருநெல்வேலி நகரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.  அங்கு பேச்சியம்மாளுக்கு தலைவலி வந்ததாகத் தெரிகிறது. 
இந்நிலையில் தலைவலி மாத்திரை என நினைத்து தவறான மாத்திரையை சாப்பிட்டாராம். இதில்  மயக்கமடைந்த பேச்சியம்மாளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT