தூத்துக்குடியில் மகளை பாலியல் தொந்தரவு செய்ததாக தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி(41). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுடைய இவர், 11ஆம் வகுப்பு பயிலும் தனது மகளை பாலியல் தொந்தரவு செய்தாராம்.
இதுகுறித்து அந்தோணிசாமி மனைவி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, அந்தோணிசாமியை கைது செய்தனர்.