தூத்துக்குடி
ராஜாஜி சிலைக்கு மரியாதை
கோவில்பட்டியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அய்யாத்துரைப்பாண்டியன், விஜயபாண்டியன், வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.