பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காட் இந்தியா அமைப்பு மற்றும் நாமத்வார் அமைப்பு நிர்வாகிகள் தூத்துக்குடி சிவன் கோயில் நான்கு ரத வீதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு குப்பைகளை சேகரித்தனர். பின்னர், மாநகாரட்சி குப்பை வண்டிகளில் அந்த குப்பைகளை ஏற்றி அங்கிருந்து அகற்றினர்.
இதுகுறித்து, நாமத்வார் அமைப்பு நிர்வாகி மால்ராஜ் கூறுகையில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜியின் ஆசியுடன் 8 ஆவது ஆண்டாக தூத்துக்குடியில் பொதுமக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணிகளை மேற்கொண்டோம் என்றார் அவர்.