கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 15) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களின் கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெறலாம்.