கோவில்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை இறந்தார்.
கோவில்பட்டியையடுத்த குமரெட்டையாபுரத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் கனகராஜ் (40). கூலித் தொழிலாளியான இவர், இம்மாதம் 7ஆம் தேதி பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாராம். கட்டாலங்குளம் ஓடு பாலத்தில் நடந்து சென்ற முருகன் மனைவி அன்னாயிமாடத்தி (30) என்பவர் மீது கனகராஜின் பைக் மோதியதாம். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கனகராஜ் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை இறந்தார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.