சாத்தான்குளம் அருகே மழைக்கு 2 வீடுகள் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தன.
கஜா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பல இடங்களில் மழை பெய்தது. சாத்தான்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை மழை கொட்டித்தீர்த்தது. இதில், புதுக்குளம் கிராமத்தில் வள்ளியம்மாள் என்பவரது ஓட்டு வீடும், முத்தம்மாள் என்பவரது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தன.அப்போது, இருவரது வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது; பொருள்கள் சேதமடைந்தன. இத்தகவல் அறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், வருவாய் ஆய்வாளர் தங்கசாமி, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.