புதூர் அருகே சென்னமரெட்டிபட்டி கிராமத்தில் கண்மாய் நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
சென்னமரெட்டிபட்டியைச் சேர்ந்த ராமராஜ் மகன் வேல்முருகன்(48). கூலித் தொழிலாளி. இவரது சடலம் சனிக்கிழமை சென்னமரெட்டிபட்டி கண்மாய் நீரில் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த புதூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூலித் தொழிலாளி, கண்மாயில் குளிக்கும் போது நிலை தடுமாறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.