தூத்துக்குடி

புதூர் அருகே நீரில் மூழ்கி ஒருவர் சாவு

DIN


புதூர் அருகே சென்னமரெட்டிபட்டி கிராமத்தில் கண்மாய் நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
சென்னமரெட்டிபட்டியைச் சேர்ந்த ராமராஜ் மகன் வேல்முருகன்(48). கூலித் தொழிலாளி. இவரது சடலம் சனிக்கிழமை சென்னமரெட்டிபட்டி கண்மாய் நீரில் மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த புதூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூலித் தொழிலாளி, கண்மாயில் குளிக்கும் போது நிலை தடுமாறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT