காயல்பட்டினத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

காயல்பட்டினம் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காயல்பட்டினம் நகர அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர துணைச் செயலர் பி.மனோகரன் தலைமை வகித்தார்.  கிளைத் தலைவர் என்.பி.முத்து,  வார்டு செயலர் இ.எம்.கட்டா உமர்,  முன்னாள் நகர பொருளாளர் சேக் சுலைமான்,  முன்னாள் கவுன்சிலர் ஏ.கண்ணன், மகளிர் அணியைச் சேர்ந்த சமுத்திரகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட  முன்னாள் இணைச் செயலர்  மெளலானா வரவேற்றார். எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன்,  தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லை கு.சடகோபன்,  எம்.கே.எஸ்.சம்சுகனி,  எஸ்.டி. கருணாநிதி மற்றும் ஏ.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்டப் பொருளாளர் எம்.ஜெபமாலை, திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் மு.ராமச்சந்திரன்,  நகர ஜெயலலிதா பேரவை செயலர் எல்.எஸ்.அன்வர்,திருச்செந்தூர் நகரச் செயலர் வி.எம்.மகேந்திரன்,  திருச்செந்தூர் கோயில் முன்னாள் தக்கார் பி.டி.மணிகண்டன்,  எம்.சுரேஷ்பாபு,  மாவட்ட எஸ்.டி. பிரிவு துணைச் செயலர் எக்ஸ்.ரஜீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.   நகரச் செயலர் எம்.ஜே.செய்யது இபுராகீம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com