திருச்செந்தூரில் தமிழக காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள பசும்பொன் தேவர் மஹாலில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் சி.நாராயணன் தலைமை வகித்தார். செயலர் எ.பால்ராமச்சந்திரன், துணைச்செயலர் பி.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெளரவ ஆலோசகர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் சி.மந்திரமூர்த்தி, பொறியாளர்கள் டி.சிவகீர்த்தி, எ.கணேசன், சிவ.துரைஅரசன், மும்பை அங்கல்பன், எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி பா.பிரியங்காவுக்கு கெளரவ ஆலோசகர் ஆ.முருகேசனும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எம்.மாலதிக்கு எஸ்.எஸ்.ஆனந்தும் பரிசுகள் வழங்கினர். விழாவில் சங்க நிருவாக கமிட்டியினர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கத்தினர், காருகுறிச்சி மறவர் அறக்கட்டளை மற்றும் தேசிய தெய்வீக அறக்கட்டளையினர் செய்திருந்தனர். முன்னதாக கெளரவ ஆலோசகர் பி.என்.ராஜா வரவேற்புரையாற்றினார். பொருளாளர் ஒய்.ஆனந்த் வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்தார். சங்க மேலாளர் ஆ.கந்தன் நன்றி கூறினார்.