இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாள்

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளை முன்னிட்டு

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசனார் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் சு.விடுதலைச்செழியன் தலைமை வகித்தார். 
மண்டல செயலர் சொ.சு.தமிழினியன்,  மாவட்டச் செயலர் முரசு.தமிழப்பன்,  மாவட்டப் பொருளாளர் சி.பா.பாரிவள்ளல், மாவட்ட துணைச்செயலர் இந்திரா, கொள்கை பரப்பு மாநில துணைச் செயலர் இர.பு.தமிழ்க்குட்டி,  உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துசெல்வன்,  மாவட்ட அமைப்பாளர் சிவா, சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலர் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் நகர அமைப்பாளர் மாரியப்பன் வரவேற்றார். திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com