இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி துறைமுக கிளை இடமாற்றம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி துறைமுக கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி துறைமுக கிளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுக ஊழியர் குடியிருப்பில் பழைய வணிக வளாகக் கட்டடத்தில் கடந்த 54 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை அலுவலகம், தற்போது புதிய வணிக வளாக கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட வங்கியின் கிளை அலுவலகத்தை வஉசி துறைமுக பொறுப்பு கழக துணைத் தலைவர் நா. வையாபுரி புதன்கிழமை திறந்து வைத்தார். தொடர்ந்து வங்கி அலுவலக வளாகத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில், வஉசி துறைமுக நிதி அதிகாரி சாந்தி, செயலர் பிஜூராய், போக்குவரத்து மேலாளர் ராமசாமி,  வங்கியின் மண்டல மேலாளர் விஸ்வநாதன், எம்பவர் அமைப்பு செயல் இயக்குநர் சங்கர்,  வங்கி ஊழியர் சங்கத் தலைவர்கள் முருகானந்த்,  தனபால்,  பாதுகாப்பு அதிகாரி பிரதீப் கமலன், முதன்மை மேலாளர் சீனிவாசன், துறைமுக கிளை மேலாளர் கீதன், துணை மேலாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com