தென்திருப்பேரையில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

தென்திருப்பேரையில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

தென்திருப்பேரையில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
கிராம உதயம் மேலஆழ்வார்தோப்பு கிளை அலுவலகம், உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனம் மற்றும் நெல்லை கேன்சர் கேர் சென்டர் இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, கிராம உதயம் கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். உதவும் உள்ளங்கள் மருத்துவ அலுவலர்கள் சிந்தியா சரோஜா, அபிராமி, ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கிராம உதயம் தன்னார்வத் தொண்டர் ராமச்சந்திரன் வரவேற்றார். உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன அமைப்பாளர் சதீஷ்பிரபு முகாமை தொடங்கிவைத்துப் பேசினார். கிராம உதயம் தன்னார்வத் தொண்டர் ஜோஸ்பின் மேரி நன்றி கூறினார்.
தன்னார்வத் தொண்டர்கள் கண்ணன், செல்வன் துரை, அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com