மணப்பாடு கடற்கரையில் உருவாகியுள்ள பெரிய மணல் திட்டுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையொட்டி, அந்த மணல் திட்டுகளை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
மணப்பாடு கடற்கரையோரம் அண்மை காலமாக மிகப் பெரிய அளவில் இயற்கையான மணல் திட்டுகள் உருவாகியுள்ளன. இதனால் தங்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் அவதியுற்றனர். இதையறிந்த எம்எல்ஏ, மணல் திட்டுகளை பார்வையிட்டு மீனவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட அவர், மணல் திட்டுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், செய்தியாளர்க ளிடம் கூறியது: மீனவர்களின் துயர் தீர்க்கும் வகையில் மணல் திட்டுகளை விரைவில் நிரந்தரமாக அப்புறப்படுத்த அனைத்துப் பணிகளும் செயல்படுத்தப்படும் என்றார்.
அப்போது, மாநில மாணவரணி அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி ஒன்றிய திமுக செயலர் பாலசிங், நகரச் செயலர் ஜான்பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.