கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். மனநல மருத்துவர் சுவாதிலட்சுமி தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னர் கல்லூரி மாணவர், மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மனநல உளவியலாளர் சேது, சமூக ஆர்வலர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.