தட்டார்மடம் காவல் நிலையத்தில் காட்சிப் பொருளான குடிநீர்க் குழாய்

தட்டார்மடம் காவல் நிலையத்தில் காட்சிப் பொருளான குடிநீர்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தட்டார்மடம் காவல் நிலையத்தில் காட்சிப் பொருளான குடிநீர்க் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தட்டார்மடம் காவல் நிலையத்தில் குடிநீர்த் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனால் காவல் நிலையத்துக்கு வருவோர் பயனடைந்தனர். 
இந்நிலையில், தற்போது குடிநீர்க் குழாய் அடைக்கப்பட்டு, தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் காவல் நிலையத்துக்கு வரும் மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, அதை சீரமைத்து காவல் நிலையத்துக்கு வரும் மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com