மணப்பாடு கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக உருவாகியுள்ள மணல் திட்டுகளை அகற்ற திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
மணப்பாடு கடற்கரையோரம் உருவாகியுள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த திமுக மாவட்டச் செயலர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தன் சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.
மேலும், மாவட்ட இளைஞரணிச் செயலர் எஸ்.ஜே.ஜெகன், மீனவர்களை சந்தித்து மணல் திட்டுகளை அகற்றுவதற்கு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
அப்போது, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர்கள் பை.மூ.ராமஜெயம், இ.அனஸ், அன்னை சுரேஷ், மணப்பாடு சிலுவைப் பிச்சை, பரி ஆகியோர் உடனிருந்தனர்.