ஸ்ரீவைகுண்டம் வடகால் கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர் இணைந்து ஈடுபட்டனர்.
இப்பணியில் வட்டாட்சியர் சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வாமணன், மண்டலத் துணை வட்டாட்சியர் சுந்தரராவகன், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பாண்டியராஜன், அய்யனார், சுப்பையா, சங்கரவடிவு, நில அளவையர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் வால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.