உலக  நன்மை வேணடி திருச்செந்தூரில் பால்குட ஊர்வலம்

திருச்செந்தூரில் ஆர்.எஸ்.எஸ். தர்ம சாகரன் மஞ்ச் சார்பில் நூற்றுக்கணக்கனோர் பால்குட ஊர்வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூரில் ஆர்.எஸ்.எஸ். தர்ம சாகரன் மஞ்ச் சார்பில் நூற்றுக்கணக்கனோர் பால்குட ஊர்வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக  நன்மை வேண்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தர்ம சாகரன் மஞ்ச் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊர்வலம் வந்து வழிபட்டனர். 
திருச்செந்தூர் சிவன் கோயில் முன் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆர்எஸ்எஸ் தர்ம சாகரன் மஞ்ச் மாநிலப் பொறுப்பாளர் சுப்பிரமணிய ஆனந்தா முன்னிலை வகித்தார். காயாமொழி பாலசுப்பிரமணிய ஆதித்தன் பால்குடம் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்தார். 
சிவன் கோயிலில் தொடங்கிய இந்த ஊர்வலமானது சன்னதித் தெரு வழியாக திருக்கோயில் கிரிப்பிரகாரம் சுற்றி கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சத்ரு சம்ஹாரமூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com