கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கோவில்பட்டி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கோவில்பட்டி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியர் ஜெயபால், முன்னாள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செளந்தரநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்கள் சண்முகவடிவு (நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி), கண்ணன் (இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி), பாப்பா என்ற மீரா (கரடிகுளம் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி), காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நடராஜன் மற்றும் மெட்டல்பட்டி அரசு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காந்திராஜ் ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கிப் பேசினார். 
திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி,  துணைத் தலைவர் திருமலை முத்துசாமி மற்றும் அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அன்புராஜ், பாலமுருகன், பழனிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com