தாமிரவருணி புஷ்கர விழாவை முன்னிட்டு, புரட்டாசி பெளர்ணமி தினமான திங்கள்கிழமை தாமிரவருணி ஆற்றில் வாழவல்லான், ஆத்தூர் மற்றும் சேர்ந்தபூமங்கலம் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வாழவல்லான் கங்கா தீர்த்த படித்துறை, ஆத்தூர் அரச மரத்து படித்துறை, சேர்ந்தபூமங்கலம் சங்கு முகம் தீர்த்த படித்துறை ஆகியவற்றில் கோபூஜை, தாமிரவருணி மகா புஷ்கரத்தை வரவேற்று ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அகில பாரத துறவியர்கள் சங்கத்தைச் சேர்ந்த வீரபிள்ளை சுவாமிகள்(காரைக்கால்), தர்ம ஜாக்கிரன் மஞ்ச் மாநில அமைப்பாளர் சுவாமி சுப்பிரமணியானந்த சரஸ்வதி, ஆலய பாதுகாப்பு கமிட்டி மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஆறுமுகம், தாமிரவருணி மகாபுஷ்கர கமிட்டி மாவட்ட அமைப்பாளர் எஸ்.சந்திரன் மற்றும் அந்தந்த பகுதி மகா புஷ்கர கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.