தூத்துக்குடியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (51). இவர், தூத்துக்குடி மின் கோட்டத்தில் நகர மத்திய பிரிவின் கள உதவியாளராக பணியாற்றி வந்தார். தூத்துக்குடி வண்ணார்தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை திங்கள்கிழமை சீனிவாசன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.