தூத்துக்குடி

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

DIN

பேய்க்குளம் பகுதியில் உள்ள 5 குவாரிகளை மூட வலியுறுத்தி பாஜக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சாத்தான்குளம்  வட்டம்,  மீரான்குளம் 1 கிராமப் பகுதியில் குளத்துக்கு நீர் வரும் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் உள்ள 5 குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி,  பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு,  மாவட்ட பாஜக ஓபிசி அணிச் செயலர் முத்துக்குட்டி தலைமை வகித்தார்.  ஆழ்வார்திருநகரி ஒன்றிய பார்வையாளர் நடராஜன், ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் திலக்சந்திரன்,  விவசாய அணி ஒன்றியத் தலைவர் நாராயணண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
மாவட்டத் தலைவர் பாலாஜி,  மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ்,  மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தாஸ்,  ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவர் காசிராஜன், ஒன்றிய துணைத் தலைவர் முண்டசாமி, நெசவாளர் பிரிவு ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணன்,  ஒன்றியச் செயலர்கள் பொன்பாண்டி,  சந்தனமுத்து,  ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் குமரேசன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட இளைஞரணி பொதுச் செயலர்கள் விக்னேஷ்குமாரி,  ராஜாரமணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூல்பாண்டியன், உடன்குடி ஒன்றிய பொதுச் செயலர்கள் அழகேசன்,  சிவந்திவேல்,  உள்ளாட்சி பிரிவு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன்,  சாமிநாதன்,  காளியப்பன்,  கோயில்பிள்ளை,  அரிகிருஷ்ணன், லட்சுமணண்  உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT