தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவுகள் இயக்குநர் டோனி மெல்வின் முன்னிலை வகித்தார்.
சுயநிதி பாடப்பிரிவு முதன்மையர் எம். சக்திவேல் தொடங்கிவைத்து கருத்தரங்கு மலரை வெளியிட்டார். கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கருத்தரங்கில், திருவனந்தபுரம் மைக்ரோஆல்கல் பாலிடெக்னாலஜி பேராசிரியர் செல்வக்குமார், நுண்ணுயிரியல் துறை தலைவர் எஸ். அபிராமி, உதவி பேராசிரியர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.