கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் நோயாளிகளின் வசதிக்கேற்ப மருந்தகத்தின் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும், மருந்தகத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமையில், மாவட்டச் செயலர் முத்துவேல், நகரத் தலைவர் நல்லதம்பி, நகரச் செயலர் அழகுமாரியப்பன், பாஜக ஒன்றியப் பொதுசெயலர் மாரிமுத்து, துணைத் தலைவர் மாரிமுத்துராஜா மற்றும் அமைப்பு சாரா பிரிவு தொழிலாளர்கள் திரளானோர் தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் முன் திரண்டனர்.
பின்னர், கோரிக்கை மனுவை மருத்துவர் அனிதாவிடம் வழங்மருத்துவர் அனிதாவிடம் வழங்கினர்.