பரமன்குறிச்சியில் அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உடன்குடி ஒன்றியச் செயலர் த.மகராஜா தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலர் மூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜெ.மல்லிகா, ஒன்றிய துணைச் செயலர் கணேசன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சுசிலா, பரமசிவம், கார்த்தீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் பேச்சாளர் லில்லிராஜன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் வி.பி.சாரதி, உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் சாமுவேல், ஊராட்சிச் செயலர்கள் தாவீது (பரமன்குறிச்சி), மகேந்திரன்(லட்சுமிபுரம்), ராஜ்குமார் (வெங்கட்ராமானுஜபுரம்), ஜெகதீஷ் (செம்மறிக்குளம்) ஜெய்னம்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.