கோவில்பட்டியில் அந்தியோதயா ரயில் நின்று செல்லக் கோரிக்கை

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்ல வேண்டும் என சமூக நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளன. 

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்ல வேண்டும் என சமூக நல அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளன. 
மதுரை மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அடுத்த நிலையில், அதிக வருமாய் கொண்ட ரயில் நிலையம் கோவில்பட்டி. ஏ கிரேடு ரயில்வே நிலையமாக இந்நிலையம் விளங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். 
 கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் விரைவு ரயில்பெட்டிகளில் பொதுப்பெட்டிகளை மேலும் அதிகரிக்க
வேண்டும்.  தாம்பரம் - திருநெல்வேலி, திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் 
கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். 
நாகர்கோவில் - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அண்ணா தொழிற்சங்கம், அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு, நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் அமைப்பினர், சமூக நல அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஆகவே, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில், நாகர்கோவில் - சென்னை செல்லும் வாராந்திர ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கச் செயலர் பழனிசாமி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com