தூத்துக்குடி

நலவாரியங்களில் பதிவு செய்தவர்கள் ஆதார் எண்ணை இணைக்க அழைப்பு

DIN

தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
   தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் உறுப்பினர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பபட்டுள்ளது. தூத்துக்குடி, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 உறுப்பினர்கள் தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்),  எண் 1, விக்டோரியா தெரு, தூத்துக்குடி அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணைத்துக் கொள்ளலாம்.
மேலும், l‌o‌s‌s‌s‌t‌u‌t‌i​c‌o‌r‌i‌n@‌g‌m​a‌i‌l.​c‌o‌m  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT