தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் கோயில் மாசித் திருவிழாவில் கருடசேவை நடைபெற்றது.
நவதிருப்பதிகளில் ஒன்றான இந்தக் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவிழாவையொட்டி, நாள்தோறும் சுவாமி நம்மாழ்வார் திருவீதி புறப்பாடு நடைபெற்று வருகிறது. 5ஆம் திருநாளான திங்கள்கிழமை வாகன மண்டபத்தில் திருமஞ்சனம், நாலாயிர திவ்யபிரபந்த கோஷ்டி, இரவில் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
நிர்வாக அதிகாரி விஸ்வநாத், தக்கார் இசக்கியப்பன், ஆய்வாளர் முருகன், ஸ்ரீஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் வரதராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 22ஆம் தேதி தேரோட்டமும், 23, 24இல் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.