ஆறுமுகனேரி நடுத் தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்குபூஜை நடைபெற்றது.
மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்குபூஜையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பி.கெளரி, வெ.குணசுந்தரி, மண்டகபடிதாரர் கா.ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.