கோவில்பட்டியில் மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெறவிருப்பதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(பிப்.22) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவிருப்பதை முன்னிட்டு சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணி கோவில்பட்டி நகர், மேற்கு மின் விநியோகப் பிரிவிற்கு உள்பட்ட கோவில்பட்டி பிரதான சாலை பத்மா கிளினிக் முதல் ரகுராம் திருமண மண்டபம் வரை, சீனிவாச அக்ரகாரத் தெரு, தட்சிணாமூர்த்தி கோயில் தெரு மற்றும் ரேவா பிளாஸா தனியார் விடுதி அருகேயுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.