தூத்துக்குடி

திருச்செந்தூரில் பிப். 28இல் தி.மு.க. சார்பில் கோலப் போட்டி

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூரில் இம்மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கோலப்போட்டி நடைபெற உள்ளது.
வீரபாண்டியன்பட்டணம் ஆதித்தனார் கல்லூரி எதிர்புறம் உள்ள மைதானத்தில் நடைபெறும்  இப்போட்டியில்,   திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (பிப். 23, 24) உடன்குடி, ஆழ்வை கிழக்கு ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்தவர்கள் பிப். 25, 26 ஆகிய தேதிகளிலும் திருச்செந்தூர், பகத்சிங் பேருந்து நிலையம் அருகேயுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 
 போட்டியில் வெல்லும் முதல் 3 பேருக்கு முறையே   5 பவுன், 3 பவுன், 2 பவுன் என்ற அடிப்படையில் தங்கச்சங்கிலி பரிசளிக்கப்படும்.  மற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும். தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலர் கனிமொழி எம்.பி. பரிசுகளை வழங்குவார் என அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டப்  பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT