மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் வட்டார அளவிலான ஆண்கள் குடும்ப நலம் மற்றும் நவீன கருத்தடை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் உடன்குடியில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின் தலைமை வகித்து பேசினார். தொழிலதிபர் ஞானராஜ் கோயில்பிள்ளை முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி,சித்திக் ஹசன், கிராம சுகாதார செவிலியர் ஜெயராணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.