தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் கட்சித் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கொடநாடு விவகாரம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அதுகுறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. கமல்ஹாசன் சினிமாவைப் போல் நினைத்துக்கொண்டு அரசியலில் பேசி வருகிறார். திமுக நல்ல விஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. குற்றம் சொல்லியே பெயர் வாங்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்ற மாவட்டத்தில் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி பெறவில்லை. மேல்முறையீடு செய்து அனுமதி பெற்ற பிறகே, அங்கு ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்றார் அவர்.