ஆலங்குளம் அருகே பாதயாத்திரையின் போது சுமை ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பக்தர் உயிரிழந்தார்.
அச்சன்புதூரை அருகே உள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (52). இவர் மனைவி வேல்மயிலுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை தனது குழுவினரோடு பாதயாத்திரையாக புறப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை மாறாந்தை அருகே சென்று கொண்டிருக்கும் போது ஐயப்பன் இளைப்பாறுதலுக்காக அவர்களுடன் வந்த சுமை ஆட்டோவின் மீது ஏறிச் சென்றாராம். அப்போது ஆட்டோவிலிருந்து தவறிவிழுந்ததில் காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சுமை ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவிடம் விசாரித்து வருகின்றனர்.