எட்டயபுரம் அருகே கிராம சபைக் கூட்டம்

திமுக சார்பில் எட்டயபுரம் அருகேயுள்ள எம். கோட்டூரில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


திமுக சார்பில் எட்டயபுரம் அருகேயுள்ள எம். கோட்டூரில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ராதா கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியது: ஜிஎஸ்டியால் சிறிய தொழிற்சாலைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல தொழிற்சாலைகள் மூடும் நிலையில் உள்ளன. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது.
தமிழக ஆட்சியாளர்கள் மக்களுடைய பிரச்னைகளை புரிந்து செயல்படுவது கிடையாது. இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com