சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கல்யாண மாதா கெபி திறப்பு விழா நடைபெற்றது. சாஸ்தாவிநல்லூர் குடிநீர் மேம்பாட்டு மையம், விவசாய நலச் சங்கத் தலைவர் வி. எட்வின் காமராஜ் தலைமை வகித்தார். டெய்சி காமராஜ் முன்னிலை வகித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஏ. லூர்துமணி வரவேற்றார். இதில், சென்னை செங்குன்றம் அருள்தந்தை அருளப்பா கலந்துகொண்டு கெபியை அர்ச்சித்து திறந்து வைத்தார்.
இதில், போலையர்புரம் தொழிலதிபர் சுரேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் டேவிட் வேதராஜ், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வி.ஜெயராஜ் நன்றி கூறினார்.