வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்ட நேரு இளையோர் மையம் , சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம்  சார்பில் வட்டார

தூத்துக்குடி மாவட்ட நேரு இளையோர் மையம் , சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம்  சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்றது. 
தூத்துக்குடி நேரு இளையோர் மைய துணை இயக்குநர் சடாச்சரவேல் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கிவைத்தார். கிராம மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.  பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.  தூத்துக்குடி நேரு இளையோர் மைய துணை இயக்குநர் தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். போட்டியில் வென்றவர்களுக்கு சாத்தான்குளம்  காவல் ஆய்வாளர்  ராஜாசுந்தர், உதவி ஆய்வாளர்  ஆழ்வார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.  மன்றப் பொருளாளர் ஆழ்வார்தாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com